22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

மதுரை – இலங்கை இடையே நேரடி விமான சேவை தொடங்கியது

ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் மீண்டும் நேற்று (20) பிற்பகல் முதல் இந்தியாவின் மதுரை மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த விமான சேவைகள் கடந்த கொரோனா தொற்றுநோய்களின் போது நிறுத்தப்பட்டன.
SG-03 இன் முதலாவது கன்னி விமானம் நேற்று (20) பிற்பகல் 02.02 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இங்கு 30 பயணிகளும் 04 பணியாளர்களும் உள்ளனர்.
அடுத்த வாரம், திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிற்பகல் 02.25 க்கு வந்தடையவும், மீண்டும் அதே நாளில் பிற்பகல் 03.10 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மதுரைக்கு புறப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 02.50 மணியளவில் வந்த இந்த விமானம் 50 பயணிகள் மற்றும் 04 ஊழியர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டது.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz