( சுரத தமிழ் செய்தி பிரிவிற்காக செட்டிகுளம் செய்தியாளர் சிவானந்தராசா )
வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 22 மாணவர்களில் விசேடதேவைச்சித்தி உள்ளடங்கலாக 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வெங்கலச் செட்டிகுள கோட்டத்தில் வரலாற்றுச்சாதனை.
விஜயசீலன் கேதுசன்-168,சிறீகரன் அஹனிகா-166,தமிழ்வேந்தன் கிருந்தினி-160,விஜேஸ்வரன் கம்சினி-154,ரகுநாதன் லக்ஷயன்-146,கோமலேசன் வினுயன்-146,கபில்ராஜ் அனுசாந்-52 புள்ளிகளையும், பெற்று சித்தியடைந்து அந்த பாடசாலைக்கும், கிராமத்திற்கும் புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
பாடசாலையின் அதிபர் திரு.கா.பிரசன்னா,வகுப்பாசிரியை மற்றும் மாணவர்கள் சிறந்த அடைவுகளைப்பெற அர்ப்பணித்த அனைவரையும் சமூகத்தினர் நன்றி பாராட்டியுள்ளனர்.
![](https://suratha.lk/wp-content/uploads/2023/11/News-2023-Nov-18-003-1.jpg)
![](https://suratha.lk/wp-content/uploads/2023/11/News-2023-Nov-18-003-2.jpg)
புள்ளிகளின் ஒழுங்கிலேயே மாணவர்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
168,166,160,154,146,146,52
மேலதிக தகவலுக்காக-
வ/பாவற்குளம் கணேசுவரா மகா வித்தியாலயம்
தோற்றியோர் 22
வெட்டுப்புள்ளிக்குமேல்.06
விசேட தேவை சித்தி.01
100 இற்கு மேல்.06
70 இற்கு மேல் 06
70 இற்கு கீழ் 03
சித்தி வீதம் 86.36%