2023 ஆம் ஆண்டு சாஹித்திய விழாவை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பிரிவால் நடாத்தப்பட்ட சிரேஷ்ட்ட மாணவர்களுக்கான திறந்த கவிதைப்போட்டியில் உயர்தர மாணவனான மெளஜூத் அல் .அமான் என்னும் மாணவன் முதலாம் இடத்தைப் பிடித்து எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாண மட்டத்திலும் முதலிடம் பெற்று தற்பொழுது தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி உள்ளமை பாடசாலைக்கும், தோப்பூர் கோட்டத்திற்கும், மூதூர் கல்வி வலயத்திற்கும் கிடைத்த புதிய சாதனையாகும்.
இவரின் இச்சாதனை குறித்துப் பாடசாலைச் சமூகம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது – இது போன்று பல சாதனை நிகழ்த்தி மண்ணுக்குப் பெருமை சேர்க்க கல்லூரி அதிபர், ஆசிரியர் குழாம் வாழ்த்தி வரவேற்கிறது …….
அதிபர், ஆசிரியர்கள், பெற்றார் சமூகம்.