ஹவுதிகள் மீது பல நாடுகள் கூட்டுத் தாக்குதல்

( Suratha News Reporter Sinnalebbay Sahana Kinniya Mahamar )

யேமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக பல இடங்களில் பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதிகள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்று வெள்ளிக்கிழமை (12ஆம் திகதி) காலை கூட்டாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *