අද කාලගුණය 2024.11.04
දිවයිනේ බොහෝ ප්රදේශවල සවස් කාලයේ ගිගුරුම් සහිත වැසි සඳහා කාලගුණික තත්ත්වයන් හිතකර වේ. මේ අතර, ගිගුරුම් සහිත වැසි සහ අකුණු අනතුරු ඇති විය හැකි සාමාන්ය ජනතාවගෙන් අලාභ හෝ හානි වළක්වා ගැනීමට අවධානයෙන් සිටින ලෙස දන්වා සිටී.
දිවයිනේ බොහෝ ප්රදේශවල සවස් කාලයේ හෝ රාත්රී කාලයේ වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
ඉහළ සහ දකුණු පළාත්වල වෙරළබඩ ප්රදේශවල මෙන්ම අම්පාර සහ මඩකලපුව දිස්ත්රික්කවල ඇතැම් ස්ථානවල උදෑසන වැසි ඇති විය හැක.
මධ්යම, සබරගමුව, මැල්, දකුණ සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට මෙන්ම කුරුණෑගල දිස්ත්රික්කයේ ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 100ක පමණ තද වර්ෂාපතනයක් අපේක්ෂා කෙරේ.
තද සුළං සහ අකුණු අනතුරු ඇති විය හැකි අවස්ථාවලදී අවධානයෙන් කටයුතු කරන ලෙස මහජනතාවට දැනුම් දෙනවා.
මුහුදු කලාපවල
දිවයින වටා වන මුහුදු ප්රදේශවල බොහෝ ස්ථානවල වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
කොළඹ සිට ගාල්ල හරහා හම්බන්තොට දක්වා වෙරළබඩ ප්රදේශවල ඇතැම් ස්ථානවලට තද වැසි ඇති විය හැක.
කොළඹ සිට ගාල්ල හරහා හම්බන්තොට දක්වා වන මුහුදු ප්රදේශවල පැයට කිලෝමීටර් 20-30 ක වේගයකින් සහ දිවයින වටා වන අනෙකුත් මුහුදු ප්රදේශවල විවිධ දිශාවලින් බස්නාහිර සිට නිරිත දෙසින් සුළං හමයි.
රට වටා වන මුහුදු ප්රදේශ විටින් විට තරමක් කැළඹිලි ස්වභාවයක් ඇති වේ.
නමුත් ගිගුරුම් සහිත වැසි සහ තද සුළං ඇති කාලවලදී එම මුහුදු ප්රදේශ තාවකාලිකව ඉතා කැළඹිලි ස්වභාවයක් ගනී.
இன்றைய வானிலை
2024.11.04
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை be பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது. இதேவேளை இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ , மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கியும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
