By. Sathiyaseelan Cheddikulam
ஏடன் வளைகுடாவில் இருந்த ஈரானிய கப்பலில் சோதனை நடத்திய இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் இறந்து விட்டதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
ஈரானிய கப்பலில் சோதனை நடத்திய நிலையில், காணாமல் படையினரை தேடும் பணியை அமெரிக்க கடற்படை மேற்கொண்டது.
54 ஆயிரத்து 390 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட கடற்பரப்பில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் கூட்டாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும் தீவிரத் தேடுதலுக்கு பின்னரும் காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக அமெரிக்கக் கடற்படை நேற்று (21) அறிவித்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி சோமாலியாவின் கடலோரப் பகுதிக்கு அருகில் இருந்த ஈரானிய கப்பலில் தமது வீரர்கள் சோதனை நடத்தியதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது.
காளிமுத்து
சத்தியசீலன்