சம்மாந்துறை அஸ்-ஸாலிஹாத் மகளிர் அரபுக் கல்லூரிக்கு ரஹ்மத் மன்சூர் அவர்களின் மரியாதை நிறைந்த விஜயம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதிமுதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள், சம்மாந்துறையில் இயங்கி வரும் அஸ்-ஸாலிஹாத் மகளிர் அரபுக் கல்லூரியை இன்று (08) மரியாதைநிறைந்த வகையில் விஜயம் செய்தார்.

இக் கல்லூரியில் மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் ஒருங்கிணைத்து வழங்கி வரும் இக் கல்லூரியில், தற்போது சுமார் 200 மாணவிகள் கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் கல்வித் தகைமைகள், கட்டிட வசதிகள், கணணித் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பிற ஆதரவு தேவைகள் குறித்த முக்கியமான தகவல்களை அவர் நேரில் பெற்றறிந்தார்.

விஜயத்தின் போது, கல்லூரியின் வரவு பதிவேட்டில் சான்றாக தனது வருகையை பதிவு செய்த ரஹ்மத் மன்சூர், அதிபர் மற்றும் நிர்வாக குழுவினருடன் நேர்காணல் மேற்கொண்டு, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடினார்.

இவ்விதமான நேரடி பார்வைகள் மற்றும் தன்னார்வ உறுதிகள், நமது சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்றும், மகளிர் கல்விக்கான ஊக்கமாக அமையும் என்றும் அனைவரும் நம்பிக்கை வெளியிட்டனர்.