2025 පළාත් පාලන මැතිවරණයට අදාළ තැපැල් ඡන්ද රාජකාරියට සම්බන්ධ වී සිටින සහකාර තේරීම්භාර නිලධාරීන්ව ඡන්ද පත්රිකා බෙදාහැරීම සම්බන්ධ දැනුවත්කිරීමේ රැස්වීම අද (04) ත්රිකුණාමලය දිස්ත්රික් තේරීම්භාර නිලධාරී ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්රධානත්වයෙන් දිස්ත්රික් ලේකම් කාර්යාලීය ප්රධාන සම්මන්ත්රණ ශාලාවේදී පස්වරු 2.00 ට පැවැත්විණි.
ඡන්ද පත්රිකා බෙදා හැරීමේ රාජකාරි හා වගකීම් සම්බන්ධයෙන් සහකාර තේරීම්භාර නිලධාරීන් වෙත දිස්ත්රික් සහකාර මැතිවරණ කොමසාරිස් එස්.කේ.ඩී. නිරන්ජන් මහතා විස්තර පැහැදිලි කළේය.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිස්ත්රික් අතිරේක දිසාපි හා අතිරේක දිස්ත්රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා ඇතුළු නිලධාරීන් පිරිසක් සහභාගි වූහ.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வு.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பிலான செயலமர்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.
வாக்குச்சீட்டு விநியோகத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
