க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி.

( Asm.Arham Kalmunai )

இன்று வெளியிடப்பட்ட க.பொ.த.(உ/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளின் பெறுபேறுகளினையிட்டு பெறுமகிழ்ச்சி அடைகிறேன்.

அத்துடன் இவர்களின் கல்விக்கு உதவிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் தங்களின் பல்கலைக் கழக துறையை மிகவும் கவனமாக தூர நோக்குடன் தெரிவு செய்யுமாறும் மேலும் தங்களின் சிறந்த ஆசிரியர்களின் ஆலோசணைகளுக்கு அமைய கேட்டுக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் சித்தியடைய தவறிய மாணவர்கள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து சிறந்த பெறுபேறுகளை பெற்று தங்களின் எதிர்காலத்தை சுபிட்சமாக அமைத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அதே போன்று இம் மாணவர்களின் பெற்றோர்கள் பெருமை இல்லாமலும் பொறுமையாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவராக இருந்து இவர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டுமென இந்த தருணத்தில் இறைவனிடம். பிரார்த்திக்கின்றேன்.

ரஹ்மத் மன்சூர்

தலைவர்- ரஹ்மத் பவுண்டேசன்-கல்முனை,
பொருளாளர் -ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *