( காளிமுத்து சத்தியசீலன் செட்டிகுளம் )
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பக்திப் பாடல்கள் இசைக்க தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
வவுனியா பொலிஸ் நிலைய சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்பு குழுவினரின் பங்களிப்புடன் சிறப்பான முறையில் புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் இடம்பெற்றது.
இப்பொங்கல் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியா நகர் பிரதேசங்களை சேர்ந்த சமுதாய பொலிஸ் பிரிவின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.