மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி !

மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (20) இரவு 7.10 மணியளவில் விற்பனை நிலையமொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் ஒருவர் தொலைபேசி விற்பனை நிலையமொன்றினுள் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

NEWS READING REPORTER
AKM.. MUKSITH
KINNIYA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *