தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது.

யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காணமுடிந்தது.
அதே போன்று

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரியில் பொங்கல் சந்தை கலை கட்டியிருந்தது. வரி அதிகரிப்புக் காரணமான விலை ஏற்றம்,பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்திருந்ததனை அவதானிக்க முடிந்தது.