மாடு மீது மோதிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து வேன் ஒன்றின் மீது மோதியதில் – ஒருவர் பலி – 9 பேர் காயம்

( T. Sivanantharasa Cheddikulam Division Vavuniya District )

இன்று (24) அதிகாலை கிளிநொச்சி பகுதியில் இ.போ.ச பஸ் ஒன்று வேனுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,

9 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் சென்ற மாடு ஒன்றின் மீது பஸ் மோதியதையடுத்து, பஸ் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வேன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Suratha Media Reporter,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *